blogger templatesCSS Drop Down Menu
Style 2

How to Add Page Navigation Widget For Blogger

------------------------------------------------------------- -->

Sunday, August 3, 2014

       வறட்சி நிலவும் இக்காலகட்டத்தில் உதித்த கவிதை (2-08-2014)
நீண்டதொரு கோடை................



மனித நேயம்
புதையுண்ட பூமி
சூரிய மகளின்
சுதந்திரக்காதலில்
சூடாகிக் கொண்டதோ?

மண்மாதா
மடியில் நெருப்பைக் கட்டிக்
கொண்டிருக்கிறாள்

இலைகள்
வேர்களோடு சண்டை
கிளைகள்
அடுப்பு வானத்தில்
இன்னொரு சூரியனாய்!

அறிவுக் கண்களுக்கு
இங்கே அகப்படாத அது
செவ்வாயில் சிறை வைக்கப்பட்டிருக்கிறதாம்
தேடலுக்கு மட்டும்
தீராத தாகம்

வெளிச்சமும் வெடிச்சத்தமுமாய்
பூமிப் புருஷனுக்கும்
வான மகளுக்கும்
இடையிடையே என்னதான்
வாய்த்தர்க்கமோ?

பாவம்
பச்சைக் குழந்தைகள்
சிரிக்க மறந்து விட்டன
ஏன் இப்படி ஒரு
நீண்ட கோடையோ?

No comments:

Post a Comment