தலைப்பு –காரைதீவு சுவாமி விபுலாநந்தர் புகழ் கரையில்லா விண்ணை எட்டட்டும்
கவியாக்கம் - கவிஞர் வில்லூர் பாரதி (மட்டக்களப்பு)
--------------------------------------------------------------------------
மீனழகாய்ப் பாடுமட்டு வாமிமீது லாவி
-----மீன்மகளிர் மெல்லிசையைக் கேட்டுணர்ந்து காதில்
தேனொழுகக் கட்டுரைகள் தீந்தமிழில் தீட்டி
-----திரைகடலாம் தமிழிசையைத் திசையாய்ந்து கூட்டி
தானழகாய் யாழ்நூலைத் தந்தபெரும் ஞானி
------தண்டமிழின் தகையான தமிழ்ச்சங்க ஏணி
வானலாவ முத்தமிழை வளர்த்திட்ட வள்ளல்
------வாகனனார் புகழையிவ் வையகமே போற்றும்
காரேறு மூதூரின் கலைஞானச் சொத்து
------கண்ணம்மை கருவினிலே கண்டெடுத்த முத்து
கூரேறு அறிவுடைகுஞ் சுத்தம்பி யென்பார்
------குருவிடமோ யாப்பறிந்து கோத்திட்டார் வெண்பா
பாரறிய அறிவியலும் பன்மொழியும் கற்று
-
-----பண்டிதராய் பலபள்ளிப் பதவிகளு மேற்றோன்
காரைமண் கடாட்சமுனி விபுலன்தன் நாமம்
------கரையில்லா விண்தொட்டுக் காணட்டும் கீர்த்தி
ஏழிசைசே ரிசைத்தமிழை யியன்றவரை யாய்ந்து
------ஏற்றினன்தன் ஆழிநிக ராய்புலமை நூலில்
பாழடைந்து போகாமல் பழம்கருவி யாழைப்
------பாதுகாத்துப் பரம்பரைக்குப் பயனுறவே தந்தோன்
கீழடைந்த சமூகமதன்; கேடுகளைக் கண்டும்
------கிளையமைத்துக் கல்வியாலே களைந்திட்டா ரன்று
நாளென்றும் திங்களென்றும் நடத்துமித லெல்லாம்
------நம்விபுலன் நனிபுகழை நல்கிற்றாம் பாரில்
அவபாமி யம்மையா ரடிதொழுது மன்று
------ஆன்மீக வழியதிலே ஆர்வமதைக் கொண்டார்
சிவநெறியும் செந்தமிழும் சீர்பெறவே யன்னார்
------சிந்தையிற் கொண்டுதொண்டாற் றியின்பமதிற் கண்டார்
அவப்பொழுதும் தவப்பொழுதாய் ஆர்வமுடன் கற்று
------ஆங்கிலத்தில் தமிழ்மொழியில் ஆற்றலது பெற்று
புவனமெல்லாம் பூத்ததிங்கே விவுலநாமம் அன்னார்
------பூத்தநாளில் புகழோங்கச் செய்வோமே நாமும்