என்னதான் இருந்தாலும் பணம் இல்லையெனில்.! .....?
குணத்தில் பெரும் குன்றென நின்று
கூடி ஒன்றாய் வாழ்தலே நன்றென்று
இனத்தால் மதத்தால் இங்கிலை பேதமென்றாகி
இரண்டறக் கலந்துமே இன்பமாய்
மனத்தால் பிறர்க்கொரு போதும்
மாசிழையாது நீ வாழ்ந்தாலும்
கணத்த பணம் இல்லையெனில்
கவனிக்க மாட்டார் உனையுலகினிலே
நேர்மை நீதி சத்தியத்தில் நேரு
காந்திவழி ஜேசு புத்தன் போதனையில்
ஆர்வலராய் அன்னை மடியிலணைவருமே
ஆதரவாய் ஆன்றும் அரவணைத்து
ஓர் குலம் ஓர் மதம் என்று ஒற்றுமையாய்
ஒழுகு நன்னெறியில் நின்றாலும்
கார் பங்களா காசு பணம் இல்லையெனில்
கவனிக்க மாட்டார் உனைக் காசினியில்
ஈ எறும்புக்கும் இம்சைதான் செய்யாது
ஈர நெஞ்சத்தில் இரக்கமே கொண்டு
பொய் களவு பொறாமை வஞ்சகம்
பொல்லாக் கோபம் யாவும் புறந்தள்ளி
மெய்யால் மிகு பணிகள் தான் செய்து
மேன்மையுறுமெண்ணமுடன் மிளிர்ந்தாலும்
பை நிறையப் பணம் இல்லையெனில்
பதர் என்றே உனைப் பார்ப்பாருலகில்
No comments:
Post a Comment