வாழ வழி காட்டு இறைவா! .......
இனத்தாலே மதத்தாலே இங்கில்லை
பேதங்கள் என்றிணங்கி
குணத்தாலே நாம் ஒன்று கூடிக்
குதூகலித்துக் குவலயத்தில்
தனத்தாலும் தாம் தழைத்து
தான தர்மம் தானிழைத்து
தினத்தாலே நீள் தீர்க்க ஆயுளோடு
திகழ்ந்திடவே வழிகாட்டு-இறைவா!.......
பொறாமை வஞ்சகம் பொய் களவு
போய் அகன்று எம் மனதில்
பொறுமையோடு உயர் சத்தியங்கள்
பொதிந்து மனத்தூய்மையோடு
சிறுமை எல்லாம் சிதைந்தோடிச்
சீர் பதினாறும் பெற்று
வறுமை நிலை நீங்கி யாவரும்
வாழ வழி காட்டு இறைவா !
நேர்மை நீதி நின்றிலங்கி
நேரும் துன்பம் பிணி கலங்கி
ஆர்வலராய் அனைவரும் இன்புறவே
ஆளுக்காள் அரும் உதவியாக
மூளும் போரது முடிவுக்கு வந்துமே
முஸ்லிம்தமிழ் சிங்களர்பறங்கியெல்லாம்
ஓர் நாட்டில் ஓர் குலமாய் வாழ்ந்திடவே
ஓர் வழி காட்டு இறைவா!
No comments:
Post a Comment