இந்தக் கழியுகத்தில்......
அகல் விளக்கு தானொளிரப்
புறம் திரிந்த புலனெலாமொடுங்கி
அகம் அதனுள் அவன் நாமம்
சிரமது கூப்பி சிந்தையிருத்திச்
சுகமான நெய்விளக்குச் சுடரொளி
சுற்றியே காட்டக் கருவறையுள்
தேகமெலாம் தான் சிலிர்க்கத்
தேவனே உன் திருவுரு கண்டேனன்று
மின்னொளி வர்ணஞாலம் மிகைபட
கண்ணைலாம் கலங்கிக் கூசிட
மின்சார மேளம் இடி இடித்து
மென்மைச் செவிப்பறை தான்கிழிய
பெண்ணவள் அணிகலனலங்காரத்தில்
அசைந்திடும் கண்ணவளை மேய
உன்னை நான் காணேனிறைவா
உண்மை இதனை நீ அறிவாய்
வெள்ளை வேட்டி தானுடுத்து
விரி நுதல் மேல் நீறணிந்து
உள்ளமெலாம் உனையே நினைந்திட
உன் வீடடைந்தேன் அன்று
வானவில்லின் நிறமதனில் வேட்டிகளும்
வான வேடிக்கைகளும் வம்புகளும்
காணவே முடியுமிந்தக் கழியுகத்தில்
கடவுளே கருவறைவிட்டெங்கு சென்றாய்
No comments:
Post a Comment