blogger templatesCSS Drop Down Menu
Style 2

How to Add Page Navigation Widget For Blogger

------------------------------------------------------------- -->

Sunday, August 3, 2014

பாரதிதாஷன்-கவி வரிகள் வில்லூரான்

                   பாரதிதாஷன்


ஒரு சித்திரை மாதம்
கனகசபையும்
இலக்குமி அம்மாளும்
இணைந்த வேண்டுதலில்
பாண்டிச் சேரி வானில் - ஒரு
புத்திர நிலவு
புதிதாய் முளைத்தது

இருண்ட வீட்டில்
ஒரு குயிலின் குரல்
கூவிக் கொண்டது
சுப்பு ரத்தினம் இவன்
அப்பன் இட்ட பெயர்
பழனி அம்மைக்கு-ஒரு
அன்புப் பரிசானான்

தமிழ் இவனிடம்
பாடம் கற்றுக் கொண்டன
கவிதை இவனைக்
காதலித்தது
பாரதிக்கு இவன்
அடிமை

பாரதி பாட்டைப் பாடும்
இந்தக் குயில்
பாரதி பாடலில்
சக்தியைக் கண்டதால்
சரித்திரமானான்
அமைதி ஊமையை
அகிலமே பேசிக் கொண்டன
தங்கக்கிளிக்கு
தகுதியானான் என்று
அறிஞர் அண்ணாவும்
தன்னாவால்
புரட்சிக் கவிஞர் என்று
புகழ்சேர்த்தார்


நாடகம் இவனிடம்
நடை பயின்றன
அதனால்த்தான்
நாலைந்து மொழிகளுக்குள்
இவன் நகல்கள்
நடப்பட்டன
முத்திரையிலும் இவன்
முகம் விதைக்கப்பட்டது

தமிழ் அமுதுண்டு
புதியதோர் உலகம் நெய்த
புரட்சிக் கவிஞன்
புரிந்த லீலையில்
அழகின் சிரிப்பாய்
மலர்ந்தன
மல்ரவண்ணனோடு
மலர்கள் நான்கு
இவன் வாசம் வீசின

புதுச்சேரியும்  இவன்
புகழ்ச் சேரியாகியது
சட்ட மன்றில் இவன்
பாட்டு வேந்தனானான்

அழகின் சிரப்பால்
இருண்ட வீட்டில் இவன்
ஏற்றிய குடும்ப விளக்கு
அறுபத்தாறில் அணைந்தது
;உதித்த மாதமே
உதிர்ந்தது கவிதை மலர்
எழுதப்பட்டன
இவன் கல்லறையில்
கிறுக்கள் காரனென்றும்
கிண்டல் காரனென்றும்
கண்டெழுதும் கவிஞன் என்றும்
இவன் அமுத தாகமும்
தமிழின் மோகமும்
என்று தீருமோ?


No comments:

Post a Comment