நூற்றாண்டு விழா மலருக்காக
மட்-விவேகானந்தா வித்தியாலயத்தின்
ஆசிரியராக இருந்த போது எழுதியது
(19-01-2009)
பேர்பெறு மகான் பேரருள் ஒழுகும்
நீராரும் கடல் சூழ நின்றிலங்கும்
காரேறு மூதூர் முனி கால் பதித்த
கவின் நிறை கல்லடிப்பதி திகழ்
சீருறுபல்கலை இயற்று கலைக்கூடமென
விளங்கு விவேகானந்தா வெனும் சாலை
நிகரிலா நீள் பணியில் நூறாண்டு நின்ற
நின் திறம் வியந்து வாழ்த்துகிறேன்
பேரறிவாளர் பாவலர் எனப் பல
பேறுகள் கண்டு பெருமையால் நிமிர்ந்து
நேரிய பணியில் நிகரிலா நோக்குடனுழைத்து
உயரிய புகழுடன் ஓங்கியே வளர்ந்து
தாராளம் மிகு பணியால் தரணி மீதில்
தக்கார் பலரை தகைமையாக்கி என்றும்
தீராத உன் இலட்சியத் தாகத்
திறம் வியந்து வாழ்த்துகிறேன்.
பாரிய உந்தன் பணியில் மிஷனோடு-ஊர்ப்
பற்றுள பலர் மிக விணைந்து நல்
உயரிய நோக்கில் உன்னத நெறியில்
உயர்ந்திடவே எம்மவர் உலகில்
காரிய மாற்றி களம் தனில் நின்று
கரம் தந்து உளம் சேர உருவாகி –பல்
அரிய கலை பல பயிற்று கலைக்கூடமே-நின்வளர்
திறம் வியந்து வாழ்த்துகிறேன்
உத்தமர் தம் ஆசியுடன் உருவாகி
உயர்பல சாதனையின் களமாகி
வித்தகத் திறனோடு விரும்பும் துறையேகி
விளை பயிராம் மாணவரெம் நிலமாகி
சேர்த்த சீர் கல்வி சிறப்பொழுக்கம்
சிறந்து ஓங்கு விவேகானந்தா வெனும்சாலை
பூத்த புகழ் 'நூற்றாண்டு' எனும் புதுமலர்
நீடு நின்று 'பண' மணம் வீச வாழ்த்துகிறேன்
No comments:
Post a Comment