blogger templatesCSS Drop Down Menu
Style 2

How to Add Page Navigation Widget For Blogger

------------------------------------------------------------- -->

Wednesday, March 24, 2021

காரைதீவு சுவாமி விபுலாநந்தர் புகழ் கரையில்லா விண்ணை எட்டட்டும்





மரபுப்பா (எண்சீர் விருத்தம் 
( காய் - காய் - காய் - தேமா) 
தலைப்பு –காரைதீவு சுவாமி விபுலாநந்தர் புகழ் கரையில்லா விண்ணை எட்டட்டும் 
கவியாக்கம் - கவிஞர் வில்லூர் பாரதி (மட்டக்களப்பு)
--------------------------------------------------------------------------

மீனழகாய்ப் பாடுமட்டு வாமிமீது லாவி 
-----மீன்மகளிர் மெல்லிசையைக் கேட்டுணர்ந்து காதில் 
தேனொழுகக் கட்டுரைகள் தீந்தமிழில் தீட்டி
 -----திரைகடலாம் தமிழிசையைத் திசையாய்ந்து கூட்டி 
தானழகாய் யாழ்நூலைத் தந்தபெரும் ஞானி 
------தண்டமிழின் தகையான தமிழ்ச்சங்க ஏணி 
வானலாவ முத்தமிழை வளர்த்திட்ட வள்ளல்
 ------வாகனனார் புகழையிவ் வையகமே போற்றும்

 
காரேறு மூதூரின் கலைஞானச் சொத்து
 ------கண்ணம்மை கருவினிலே கண்டெடுத்த முத்து 
கூரேறு அறிவுடைகுஞ் சுத்தம்பி யென்பார் 
------குருவிடமோ யாப்பறிந்து கோத்திட்டார் வெண்பா
 பாரறிய அறிவியலும் பன்மொழியும் கற்று -
-----பண்டிதராய் பலபள்ளிப் பதவிகளு மேற்றோன் 
காரைமண் கடாட்சமுனி விபுலன்தன் நாமம்
 ------கரையில்லா விண்தொட்டுக் காணட்டும் கீர்த்தி 

ஏழிசைசே ரிசைத்தமிழை யியன்றவரை யாய்ந்து 
------ஏற்றினன்தன் ஆழிநிக ராய்புலமை நூலில் 
பாழடைந்து போகாமல் பழம்கருவி யாழைப்
 ------பாதுகாத்துப் பரம்பரைக்குப் பயனுறவே தந்தோன்
கீழடைந்த சமூகமதன்; கேடுகளைக் கண்டும் 
------கிளையமைத்துக் கல்வியாலே களைந்திட்டா ரன்று 
நாளென்றும் திங்களென்றும் நடத்துமித லெல்லாம் 
------நம்விபுலன் நனிபுகழை நல்கிற்றாம் பாரில் 

அவபாமி யம்மையா ரடிதொழுது மன்று 
------ஆன்மீக வழியதிலே ஆர்வமதைக் கொண்டார் 
சிவநெறியும் செந்தமிழும் சீர்பெறவே யன்னார்
 ------சிந்தையிற் கொண்டுதொண்டாற் றியின்பமதிற் கண்டார் அவப்பொழுதும் தவப்பொழுதாய் ஆர்வமுடன் கற்று
 ------ஆங்கிலத்தில் தமிழ்மொழியில் ஆற்றலது பெற்று புவனமெல்லாம் பூத்ததிங்கே விவுலநாமம் அன்னார்
 ------பூத்தநாளில் புகழோங்கச் செய்வோமே நாமும்

No comments:

Post a Comment