blogger templatesCSS Drop Down Menu
Style 2

How to Add Page Navigation Widget For Blogger

------------------------------------------------------------- -->

Thursday, September 4, 2014

கவிதரும் இனிய காலை...-




                  காரிருழகலக் கதிரோ னொளி யுமிழக்
                                  கா மலர் விரிந்து மணம் பரப்பும்
                 ஏரினை யேந்தியே யணியென ஏகலைவன்
                                ஏகும் காட்சி இணையிலா எழில் நிரப்பும்
                  நீரிடை யோடி மீன் நீந்தி விளையாடும்-கூடு
                               நீங்கிப் புல்லினம் பறந்திரையைத் தேடும்
                  பாரிடை மாந்தர் பழகிய பணிகள் தொடரும்
                              நிகரிலாக் காட்சிதான் நெஞ்சையள்ளும்

                 பாரிருலகற்றி பகலோன் பரப்பு மொளியில்
                                 பரந்த வான் வண்ணம் காட்டும்
                 ஓரிடம் திரண்ட மேகம் ஓடியாடியெங்கும்
                                ஓப்பிலா ஒப்பனைகள் சேர்க்கும்
                 பூவிடைத் தாவி வண்டு அமதமுண்ணும்
                                புல் நுனியில் பனித்துளிகள் மின்னும்
                நாரிடைச் சேர்ந்த வெள்ளைப் பூக்களென
                               பாலர் பள்ளி நாடும் காட்சி மனதையள்ளும்

                 கூரை முகடேறிக் கோழிகள் கூவும்
                              கண்மணியாள் முன்னெழுந்து கடமை தொடரும்
                 கரை சேரும் வடம் கண்டு கவலை கரையும்
                              கண்ணவனைக் கண்டு காதலால் மனம் நிறையும்
                 திரைகடலில் அலைகள் மோதி நுரை மறையும்
                             திரை மறைவில் திங்களின் கதிர் விரியும்
                 வரை மீது பணி மூட்டம் திரை போடும்
                              வாரி நீரள்ளிடவே வனிதையர் கூட்டம் கூடும்

                  மானிடமே மனங்களல்லாம் ஒருமை என்றே
                               வாங்கோடு மணிகளும் ஓங்கி ஒலிக்கும்
                  ஆணினமும் பெண்ணினமும் கூடி ஒன்றாய்க்
                               அலுப்பின்றி அலுவல்கள் அரங்கேறும்
                  மானினம் துள்ளியோட மந்திகள்  தாவும்
                               கானக் குயில் பாடி இசைகள் சேரும்
                   இனிய காலைப் பொழுது காணவென்
                               இரண்டு கண்கள் கானாதென்பேன்

No comments:

Post a Comment